" நட்சத்திரா, நட்சத்திரா..." என்று என்னை
கூப்பிட்டுக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தனர் அப்பா அம்மா இருவரும்.
கூப்பிட்டுக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தனர் அப்பா அம்மா இருவரும்.
"என்னப்பா?" என்று நான் கேட்க ,
"அடுத்த வாரம் நடக்கப்போற உன் கல்யாணத்துக்காக பட்டுப்புடவை , நகைகள் எல்லாம் வாங்கி வந்திருக்கோம். பார்த்து சொல்லும்மா எப்படி இருக்குன்னு ?"
"நட்சத்திரா, உனக்குப் பிடிச்ச மெரூன்கலர்ல பட்டுப்புடவை எடுத்து வந்திருக்கோம் . விலை ஒரு லட்சம் ரூபாய் . பிடிச்சிருக்கா ?"
" இந்த வைர நெக்லசை பாரும்மா. லேட்டஸ்ட் டிசைனாம் . உனக்குன்னே செஞ்ச மாதிரி இருக்கு ."
"இது புது மாடல் லேடீஸ் வாட்ச் . பத்தாயிரம் ரூபாய். பிடிச்சிருக்கா ? "
"இது நீ ரொம்ப நாளா கேட்டுக்கிட்டிருந்த தங்க கொலுசு . பிடிச்சிருக்கா பாரு , இல்லேன்னா மாத்திக்கலாம் ."
" இப்படிப் பிடிச்சிருக்கா , பிடிச்சிருக்கா என்று கேட்ட அப்பா , அம்மா பதினாறு வயசு வித்தியாசமுள்ள மாமா மகனை கல்யாணம் பண்ணிக்க உனக்கு பிடிச்சிருக்கா ? " என்று மட்டும் கடைசிவரை என்னிடம் கேட்கவே இல்லை .
No comments:
Post a Comment