Saturday, April 16, 2011

தேர்தல் - 2011

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவுக்குப் பிறகு தமிழ்நாட்டில்
தேர்தல் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது.முடிவுகளை தெரிந்து கொள்ளத்தான் நீண்ண்ண்...ட நாட்கள்  காத்திருக்க வேண்டி   
இருக்கிறது.    மரண அவஸ்தை என்பார்களே அதைத்  
தான்  எல்லா அரசியல்வாதிகளும் இப்போது அனுபவித்துக் 
கொண்டிருப்பார்கள் . ஒவ்வொரு முறையும் தேர்தல் கமிஷன் 
ஆரம்பத்தில்  கெடுபிடியாய் இருப்பதும் , கடைசி கட்டத்தில் அவர்கள் 
கண்ணில் மண்ணை தூவி விட்டு அரசியல்வாதிகள் பணத்தால் தீர்ப்பை 
விலைக்கு வாங்குவதும்  நடந்து கொண்டே இருக்கிறது . இன்றைக்கு 
தேர்தலில் நிற்க நல்லவன் என்ற தகுதியெல்லாம் மலையேறி போயாச்சு.
பணபலம் படைத்தவனாக , பாவ செயல்களுக்கு அஞ்சாதவனாக இருந்தால்
மட்டுமே சீட் வழங்கப்படுகிறது .இவர்கள் ஜெயித்தால் நாட்டுக்கு நல்லது
தான் செய்வார்களா ? செய்யத்தான் விடுவார்களா ? 

   
Picture Of Indian Flag, India Flag, Indian Flag, National Flag of India, Flag of India Picture, Indian Flag Picture, Indian National Flag, About India Flag

காமராஜர் போல, கக்கன் போல, அண்ணாதுரை போல யாராவது ஒரு நல்ல தலைவன் வந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற 
மாட்டானா ? என்ற ஏக்கம் எல்லோரைப் போல எனக்கும் உண்டு .அதுவரை 

      "சொல்லடி பாரத மாதா - நீ 
       சுதந்திரம் பெற்றது  தீதா "

என்றே புலம்பத் தோன்றுகிறது. 

No comments:

Post a Comment