Monday, April 4, 2011

கிரிக்கெட்

இந்தியாவின்  28 வருட காத்திருப்பு .சச்சினின் 21 வருட கனவு நிறைவேறிய
நாள் ஏப்ரல் 2 .உலகக் கோப்பையை வென்று இந்தியர்கள் அனைவரையும்
ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளனர் நம் வீரர்கள்.மேற்கு இந்திய தீவுகள்,
பாகிஸ்தான்,ஆஸ்திரேலியா,ஸ்ரீலங்கா என்று நான்கு முன்னாள் சாம்பியன்
களை வரிசையாக வென்று சாம்பியன்களின் சாம்ப்பியனாக திகழ்கிறது
இந்தியா.ஆரம்பத்திலே சேவாக், சச்சின் வெளியேற அதிர்ந்து போனது 
ஒட்டு மொத்த இந்தியாவும்.ஆனால், பின்னால் வந்த கம்பீரும்,டோனியும் 
சிறப்பாய் ஆட சரிவிலிருந்து மீண்ட இந்தியா கோப்பையையும் வென்றது. 
வீரர்கள் அனைவரும் பரிசு மழையிலும்,பாராட்டு மழையிலும் நனைந்தார்கள் .நனைகிறார்கள் .நனைவார்கள் .
 tamil cricket news-ICC Cricet World Cup 2010
ஆனாலும்,சின்ன வருத்தம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீதும், அது
வீரர்களுக்கு கொடுப்பதாக சொன்ன ஒரு கோடிரூபாய் மீதும். உலகின்
நெம்பர் 1 பணக்கார கிரிக்கெட் வாரியமான இந்தியா மூன்று கோடியோ,
அஞ்சு கோடியோ ஒவ்வொருவருக்கும் அறிவித்திருக்கலாம் .ஏனென்றால்
அவர்களை  வைத்துதானே கிரிக்கெட் வாரியம்  கோடிகளை குவித்துக்
கொண்டிருக்கிறது .மற்றபடி எல்லோரும்  எதிர்பார்த்ததைப் போல இந்தியா
உலகக் கோப்பையை வென்றது அடுத்து ஒருமுறை இந்தியா வெல்லும்வரை எல்லார்  மனதிலும்  பசுமையாய்  நிற்கும் ...நிற்கும் ...
நிற்கும்.

   

No comments:

Post a Comment