காலிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி கூட்டு முயற்சிக்கு
கிடைத்த வெற்றி . ஃபீல்டிங் ,பௌலிங் இரண்டிலும் நல்ல முன்னேற்றம் .
ஆஸ்திரேலியாவை ஆரம்பம் முதலே அதிகம் ரன் அடிக்கவிடாமல்
பார்த்துக் கொண்டது சேஸிங்போது நல்ல பலனைக் கொடுத்தது .இது
யுவராஜின் உலகக் கோப்பைப் போல. தொடர்ந்து பேட்டிங், பௌலிங்
இரண்டிலும் அசத்திவருகிறார் .கடைசி கட்ட டென்ஷனை குறைத்தது
ரெய்னா தான்.அதற்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் .சச்சின்
சதத்தில் சதம் காணாவிட்டாலும் 18,000 ரன்களை கடந்து இன்னுமொரு
சாதனையை படைத்தார் .மொகாலி மைதானம் இப்போதே திருவிழா
பரபரப்புக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது .ஏனென்றால் நம் பிரதமர்
மேட்ச்சை பார்க்க வருவதோடு பாகிஸ்தான் பிரதமர் ,ஜனாதிபதி
இருவரையும் அழைத்துள்ளார் .
இருவரையும் அழைத்துள்ளார் .
பங்காளி பாகிஸ்தானை மீண்டும் மண்ணை கவ்வ வைக்க ஒரு
சந்தர்ப்பம்.பயன்படுத்திக் கொள்வார்கள் நம்மவர்கள் என்றே
நினைக்கிறேன் .
உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவை ,பாகிஸ்தான் ஒரு
முறைகூட வென்றதில்லை என்பது இன்னொரு இனிப்பான செய்தி .
No comments:
Post a Comment