ஜெயா டிவி-யில் விசுவின் " மக்கள் அரங்கம் " பார்த்தேன். அதில் இரண்டு
நிகழ்ச்சிகள் என்னை நெகிழவும்,மகிழவும் வைத்தது.
ஒன்று - பெங்களூரில் இருக்கும் "உன்னத்தி ( UNNATI )" என்ற தொண்டு
அமைப்பு. இது வறுமைக்கோட்டில் வாழும் ஏழைகளுக்கு ஒன்பது
வகையான வேலைவாய்ப்பு பயிற்சிகளை முற்றிலும் இலவசமாக
வழங்கி, தக்க நிறுவனத்தில் வேலைவாய்ப்பும் வாங்கித் தருகிறது .
வெளியூர்காரர்களாக இருந்தால் உணவு ,இருப்பிடம் ஆகியவற்றையும்
இலவசமாக தருகிறது.எல்லா ட்ரெய்னிங் கோர்ஸ்களும் 70 நாட்கள்
தான்.இதில் பயன் பெற்றவர்கள் பேட்டியும் ஒளிபரப்பாகியது.LKG,UKG
போன்றவற்றிற்கே லட்சக்கணக்கில் பணம் கட்ட வேண்டிய இந்த
காலத்தில் 'உன்னத்தி' செய்யும் தொண்டு உன்னதமானது.அது இருக்கும்
திசைநோக்கி கைகூப்பி வணங்கினாலும் தவறில்லை.
உன்னத்தி மூலம் பயன்பெற விரும்புபவர்கள்
http://unnatiblr.org
போய் பாருங்கள்.
இரண்டாவது - 90 வயது பெண்மணி நடத்தும் அனாதைஇல்லம்.அந்தப்
பெண்மணியின் இரண்டு மகன்களும் வெளிநாட்டில் நல்லவேலையில்
இருக்கிறார்கள்.அவர் நினைத்திருந்தால் ஏதாவது ஒரு மகனோடு வெளி
நாட்டில் செட்டிலாகி இருக்கலாம்.ஆனால்,அவர் 60 அனாதைக் குழந்தை
களையும்,கொஞ்சம் முதியவர்களையும் அன்போடு அரவணைத்து பாது
காத்து வருகிறார் . 90 வயதிலும் தளராத நம்பிக்கையோடு சேவை
செய்யும் அந்தப் பெண்மணியை நினைக்கும்போது மனிதநேயம் அறவே
அழிந்துவிடவில்லை.அது இந்தமாதிரி மனிதர்களால் இன்னும் சாகாமல்
தான் இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. விசு சார் படம் எடுத்த
காலத்தில் பெற்ற பேர்,புகழைவிட"அரட்டை அரங்கம் " "மக்கள் அரங்கம் "
மூலம் செய்த,செய்யும் சமூகத்தொண்டால் கிடைக்கும் பேர், புகழ்
புனிதமானது, ஆத்மார்த்தமானது.வளரட்டும் அவர் சமூகத்தொண்டு.
No comments:
Post a Comment