அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனை
ஆக்குவதென்பது முழுக்க,முழுக்க அரசியல் உள்நோக்கம் உடையது.
முந்தைய திமுக அரசு கொண்டுவந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக
கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பது இன்றைய ஆட்சியாளர்களுக்கு
நல்லதல்ல.இன்னும் இவர்கள் பக்குவப்படவில்லை என்பதையே இந்த
செயல் காட்டுகிறது.மக்களின் வரிப்பணத்தை இப்படி வீணடிக்கவா ஆட்சி
மாற்றத்தை கொண்டு வந்தார்கள் மக்கள் !அவர்கள் எல்லாவற்றையும்
கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தேவைப்படும்போது பொங்கி
எழவும் தயங்கமாட்டார்கள் என்பதை ஆட்சியில் உள்ளவர்கள் ஞாபகத்தில்
வைத்துக்கொள்வது நல்லது.
No comments:
Post a Comment