மும்பை கிரிக்கெட் டெஸ்ட் இறுதி ஓவர் வரை மட்டுமல்ல, இறுதி
பால்வரை பரபரப்பாய் நடந்து முடிந்திருக்கிறது.கைக்கெட்டிய தூரத்தில்
வெற்றி இருந்தும் அதை கோட்டைவிட்டது நம் இந்திய அணி.கொஞ்சம்
திமிர்,கொஞ்சம் அலட்சியம் எல்லாம் தான் இதற்குக் காரணம் என்று நான்
நினைக்கிறேன். சேவாக் ஆரம்பித்து கொடுத்த நல்ல தொடக்கத்தை
பயன்படுத்தி பத்துஓவர் மிச்சம் இருக்கும்போதே முடித்திருக்கவேண்டிய
மேட்சை வீணடித்துவிட்டார்கள் மிடில்வரிசை ஆட்டக்காரர்கள். 3-0
என்று தொடரை வென்று இருந்தால் ஐசிசி தர வரிசையில் முன்னேற
இன்னும் கொஞ்சம் அதிக புள்ளிகள் கிடைத்திருக்கும்.இப்போது அதுவும்
போச்சு.மற்றபடி எதிர்பார்த்த சச்சின் சதம் அடிக்காமல் எதிர்பாராத
அஸ்வின் சதமடித்து அசத்தினார்.90-களின் துரதிஷ்டம் துரத்த சச்சின்
மீண்டும் 94-ல் அவுட்.மும்பை ரசிகர்களின் இதயமும் அதோடு அவுட்.
இனி அவர் செஞ்சுரி அடிக்க ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வரை
காத்திருக்கத்தான் வேண்டும் ,வேறு வழியில்லை.
No comments:
Post a Comment